search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமநாதபுரத்தில் விபத்து"

    ராமநாதபுரத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் தங்கப்பா நகரைச் சேர்ந்தவர் மாரீசுவரன் (வயது 29). சரக்கு வேன் டிரைவர். நேற்று இவர், தினைக்குளம் பகுதிக்கு சரக்குகள் ஏற்றிச் சென்றார்.

    அவருடன் லோடுமேன்கள் மாரிமுத்து (41), தங்கப்பன் (55) ஆகியோரும் சென்றனர். தினைக்குளத்தில் சரக்குகளை இறக்கி விட்டு அவர்கள் ராமநாதபுரம் புறப்பட்டனர். அச்சடி பிரம்பு அருகே வேன் வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி ஓடி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 2 தொழிலாளர்களும் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் மாரீசுவரன் காயமின்றி தப்பினார். காயம் அடைந்த தங்கப்பன் மற்றும் மாரிமுத்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    மாரிமுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தங்கப்பன் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×