என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ராமநாதபுரத்தில் விபத்து
நீங்கள் தேடியது "ராமநாதபுரத்தில் விபத்து"
ராமநாதபுரத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் தங்கப்பா நகரைச் சேர்ந்தவர் மாரீசுவரன் (வயது 29). சரக்கு வேன் டிரைவர். நேற்று இவர், தினைக்குளம் பகுதிக்கு சரக்குகள் ஏற்றிச் சென்றார்.
அவருடன் லோடுமேன்கள் மாரிமுத்து (41), தங்கப்பன் (55) ஆகியோரும் சென்றனர். தினைக்குளத்தில் சரக்குகளை இறக்கி விட்டு அவர்கள் ராமநாதபுரம் புறப்பட்டனர். அச்சடி பிரம்பு அருகே வேன் வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி ஓடி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 2 தொழிலாளர்களும் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் மாரீசுவரன் காயமின்றி தப்பினார். காயம் அடைந்த தங்கப்பன் மற்றும் மாரிமுத்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மாரிமுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தங்கப்பன் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் தங்கப்பா நகரைச் சேர்ந்தவர் மாரீசுவரன் (வயது 29). சரக்கு வேன் டிரைவர். நேற்று இவர், தினைக்குளம் பகுதிக்கு சரக்குகள் ஏற்றிச் சென்றார்.
அவருடன் லோடுமேன்கள் மாரிமுத்து (41), தங்கப்பன் (55) ஆகியோரும் சென்றனர். தினைக்குளத்தில் சரக்குகளை இறக்கி விட்டு அவர்கள் ராமநாதபுரம் புறப்பட்டனர். அச்சடி பிரம்பு அருகே வேன் வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி ஓடி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 2 தொழிலாளர்களும் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் மாரீசுவரன் காயமின்றி தப்பினார். காயம் அடைந்த தங்கப்பன் மற்றும் மாரிமுத்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மாரிமுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தங்கப்பன் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X